பாகிஸ்தானில் அமெரிக்கத் தூதரகத்தை குறிவைத்து இன்று மர்ம நபர்கள் துப்பாக்கித் தாக்குதல் மேற்கொண்டனர். 4 மணி நேரம் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் அமெரிக்க துணைத் தூதரகம் அமைந்துள்ளது.
பலத்த பாதுகாப்புடன் கூடிய அந்தப் பகுதியில், துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர்கள், திடீரென அமெரிக்கத் துணை தூதரகத்தைச் நோக்கி சுட்டனர்.தூதரகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிசாரும் பதில் தாக்குதல் நடத்தினர்.
4 மணி நேரமாக நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மர்ம நபர்களைப் பிடிக்க பொலிசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்கத் தூதரகம் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்த சம்பவத்தையடுத்து, அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.பெஷாவர் நகரம் முழுவதும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. (News-Neruppu)
Action with a heart Headline Animator
Sunday, August 29, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment